crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

சிறுமி மரணம், சந்தேகநபர் கைது, கொலை செய்ததாக வாக்குமூலம்

அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறுமியை கொலை செய்ததை போலீஸ் விசாரணைகளின்போது ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது

அட்டுளுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா கடந்த 27 ஆம் திகதி காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சென்று பொருள் கொள்வனவு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனார்

காணாமல் போன சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நில பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார், 9 வயதான ஆய்ஷா அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்

சிறுமி நேற்று முன்தினம் (28) சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் குறித்த மரணம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேகொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

இச்சம்பவம் அப்பிரதேசத்தை மாத்திரமன்றி, முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 + = 88

Back to top button
error: