crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இன்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இவர்கள் கொழும்பு வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 + = 20

Back to top button
error: