crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது .

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

‘சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 4

Back to top button
error: