crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஆசிரியர் சங்கம் ஹர்த்தால் நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பு

இலங்கை முழுவதும் இன்றைய தினம் (06) முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணுமாறும் கோரியும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது

இலங்கை முழுவதும் முன்னேடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு சுகாதார தரப்பினர், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி, இலங்கை தபால் சேவை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 64 = 73

Back to top button
error: