crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக்கட்டுப்பாடு 21 – 25ஆம் திகதி மற்றும் 25 – 28 திகதி வரை

மீண்டும் பயணக்கட்டுப்பாடு மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையிலும் மற்றும் 25 ஆம் திகதி தொடக்கம் 28 திகதி வரையிலும் விதிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அதி காலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என கொவிட்19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

அத்தோடு மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இரவு 11.00 மணி தொடக்கம் மே மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கழமை அதிகாலை 4.00 மணி வரை பயணக்கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: