crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் நேற்றைய தினம் 2275 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணல்

இலங்கையில் நேற்றைய தினம் 2275 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெரும்பாலானோர் (438) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 410 பேர், காலி மாவட்டத்தில் 261 பேர், களுத்துரை மாவட்டத்தில் 241 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 179 பேர், கண்டி மாவட்டத்தில் 138 பேர், குருநாகல் மாவட்டத்தில் 100 பேர், கேகாலை மாவட்டத்தில் 89 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 84 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 46 பேரும் நேற்றைய தினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 38 பேர், பதுளை மாவட்டத்தில் 29 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 22 பேர், வவுனியா மாவட்டத்தில் 17 பேர், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 14 பேர் வீதமும், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 13 பேர் வீதமும், பொலன்னறுவை மாவட்டத்தில் 10 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேர், மொனராகலை மாவட்டத்தில் 8 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 4 பேர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வந்த 63 பேரும் நேற்றைய தினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − 44 =

Back to top button
error: