crossorigin="anonymous">
உள்நாடுபொது

மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழப்பு

இலங்கையில் இன்று (16) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ,இடம்பெற்ற மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த விபத்துக்கள் தொடுவாவ, எஹெலியகொட மற்றும் பேராதெனிய ஆகிய இடங்களிலேயே விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை தெதுரு ஓய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொபெயிகனே பிரதேசத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞனை தேடும் பணியில் கடற்படையினர், பொலிஸார், பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். வாழைச்சேனை கானாத்தன குளத்தில் நீராடச் சென்ற ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 2 = 10

Back to top button
error: