crossorigin="anonymous">
உள்நாடுபொது

காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிப்பு

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்து அறிக்கை

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் இன்று (16) காலை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பலராலும் அவதானிக்கக்கூடியதாக இருந்ததுதுடன் இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டிருந்தன

இருந்தபோதிலும் இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ‘மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என எச்சரித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது

தற்போது குறித்த பொலிஸ் ட்ரக் வண்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − 84 =

Back to top button
error: