crossorigin="anonymous">
விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளை நடத்த தீர்மானம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது

இதில் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை எங்கு நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டதுடன் மேலும் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் போட்டிகளை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 14 = 22

Back to top button
error: