crossorigin="anonymous">
விளையாட்டு

பாடசாலை மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதை நோக்காக கொண்ட பயிற்சி இரண்டு நாட்களாக 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி நெறியானது தன்னாமுனை மியானி உள்ளக கூடைப்பந்தாட்ட அரங்கில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எந்திரி பார்த்தசாரதி தலைமையில் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தேசிய கூடைப்பந்தாட்ட சம்ளேனம் ஆகியன இணைத்து மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்கும் மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டத்திற்கு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி பாசறையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு இதன் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 75 = 77

Back to top button
error: