crossorigin="anonymous">
ஆக்கங்கள்

இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு

இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்றது.

“சமூக ஊடகங்களின் உயர்வு” என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 71 இலட்சம் ஆகும்.

இதேபோன்று உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.8 பில்லியன் ஆகும் என்று இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன இதன்போது தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, பேராசிரியர் ரியூட்டர் வீரசிங்க, பேராசிரியல் சுணந்த மகேந்திரா, இலங்கை பத்திரிகை பேரவையின் ஆணையாளர் நிரோஷன் தபோவிட்ட உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 67

Back to top button
error: