crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைக்கு ஒருவாரத்தில் தீர்வு காண பணிப்பு

இலங்கை மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காக மின்சார சபைக்கு 93 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

மின் துடிப்பை மேற்கொள்ளாமலிருக்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மட்டத்திலான விசேட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட பேச்சுவார்த்தையின்போது மின் துண்டிப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் தேசிய மின் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்தில் தீர்வு காணுமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 10 + = 16

Back to top button
error: