crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்த கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரிடர்கள் எற்படும் போது பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்; தலைமையில் கடந்த வெள்ளியன்று (21) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இம் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை எற்படும் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளான கிரான், ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித மேதல்களால்; ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ உத்தியேகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 63

Back to top button
error: