crossorigin="anonymous">
உள்நாடுபொது

“THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி ஜனாதிபதிக்கு

முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொட அவர்களால் எழுதப்பட்ட “THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி, இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஷாந்த கோட்டேகொட அவர்களின் 36 வருட கால இராணுவச் சேவையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இராணுவத்தின் காலாட்படைப் பிரிவின் மேஜர் தரநிலை முதல் இராணுவத் தளபதியாகப் பதவிநிலை வகித்து ஓய்வு பெற்றது வரை போர்க்களத்தில் கிடைத்த வெற்றிகள் மற்றும் பின்னடைவுகளின் ஒப்பீட்டு ஆராய்வை இதன் மூலம் முன்வைப்பதாக கோட்டேகொட அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 + = 85

Back to top button
error: