crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்பொது

முல்லைத்தீவிலும் வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (03) முன்னெடுத்துள்ள அடையாள பணிப் பகிஸ்கரிப்பினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் அரை மணித்தியாலம் வைத்தியசாலை முன்பாக அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த அடையாள பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும், தமது கோரிக்கைகள் உரியவகையில் அரசினால் தீர்த்து வைக்கப்படாவிட்டால் தொடர் போராடடத்தில் ஈடுபட நேரிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வைத்தியசாலை, மல்லாவி வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறித்த அடையாள கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: