crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

நானாட்டான் பகுதி சுகாதார துறையினர் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை

மன்னார் மாவடடத்தில் நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று (03) வியாழக்கிழமை காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

நானாட்டான் பிரதேசத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

குறிப்பாக பயணத் தடை நாட்களில் வெளியில் நடமாடுகின்ற மற்றும் கடமை நிமிர்த்தமாக சென்ற அரச உத்தியோகத்தர்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள் என 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பேரூந்து நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையில் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் , நானாட்டான் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 3 =

Back to top button
error: