crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இலங்கை வங்கி கிளை திறந்து வைப்பு

இலங்கை வங்கியினால் மன்னார் மாவட்ட செயலகத்தில் புதிய தொழில்நுட்பத்துடன்  அமைக்கப்பட்ட இலங்கை  வங்கி கிளை நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமேல் தலைமயில் இலங்கை வங்கியின் வட மாகாண உதவி பொது முகாமையாளர் திரு.சிவானந்தன் அவர்களுடன் வங்கி கிளையை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், இலங்கை வங்கியின் மாகாண செயற்பாட்டு முகாமையாளர், இலங்கை வங்கியின் வன்னி பிரதேச முகாமையாளர், இலங்கை வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் மற்றும் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை அலுவலகத்தின் முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 5

Back to top button
error: