crossorigin="anonymous">
உள்நாடுபொது

தீக்கிரையான கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்

கடந்த மே 09ஆம் திகதி அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து புறப்பட்டு, 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே மேற்படி கப்பல் வந்து சேர்ந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது விபரித்தார்.

அனர்த்தத்திற்கு உள்ளான மேற்படி கப்பல் மூழ்கிவிடும் அபாயத்தில் இருப்பதனை, கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: