crossorigin="anonymous">
உள்நாடுபொது

குருநாகல் மேயரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏ.எஸ்.பி உடனடியாக இடமாற்றம்

குருநாகல் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பிரித் நிகழ்வின்போது, குருநாகல் மேயரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதி பொலிஸ் அத்தியட்சகரை (ஏ எஸ் பி) உடனடியாக இடமாற்றுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குருநாகல் பொலிஸ் நிலையத்தினுள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இடம் வழங்கியது தொடர்பாக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய, விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு தனியான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று ஏற்கனவே குருநாகல் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 9

Back to top button
error: