crossorigin="anonymous">
உள்நாடுபொது

முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி

அங்கொடை, சிறிபெரகும் வீதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலுள்ள 29 முதியவர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதுடன் இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அனைவருக்கும் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மட்டுமே முதியோர் இல்லத்திலிருந்து வெளியே சென்று வரும் நிலையில், அவர் மூலமாக ஏனையோருக்குத் தொற்று பரவல் அடைந்துள்ளது எனக் கொதட்டுவ பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 2 =

Back to top button
error: