crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சுகாதார பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் அன்பளிப்பு

கண்டி மாவட்டத்தில் கொரோனா காரணமாக இறப்பு (ஜனாசா) ஏற்படுமிடத்து இறந்தவர்களின் குடும்பத்தார் இறந்தவரை பார்வையிடுவதற்கான சுகாதார பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் இலவசமாக வழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கண்டி மாவட்டத்தில் கொரோனா இறப்பு ஏற்படுமிடத்து குடும்பத்தார் ஜனாசாவை பார்வையிடுவதற்கு தேவையான பாதுகாப்பு உடை மற்றும் முகக்கவசம் அல்ஹாஜ் ரஷீட் ‘Global Visa Centre’ உரிமையாளரினாலும், கண்டி ‘Sofacity’ உரிமையாளர் அல்ஹாஜ் மர்சூக் அவர்களினதும் பங்களிப்புடனும் கண்டி ஜனாசா சங்கத்திற்கு நேற்று (31) அன்பளிப்பு செய்யப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவரும் கண்டி ஜனாசா சங்கத்தின் அங்கத்தவருமான எஸ் எம் ரிஸ்வி அவர்களின் எற்பாட்டில் கண்டி ஜனாசா சங்க காரியாலயத்தில் அதன் தலைவரும் வகுப் சபை அங்கத்தவரும் அல்ஹாஜ் பஸ்லூல் ரஹ்மான் மெளலவி, அல்ஹாஜ் உமர்தீன் மெளலவி, அல்ஹாஜ் பாசில் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − 12 =

Back to top button
error: