crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐ. தே. கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (31) சிறிகொத்தவில் நடைபெற்றதுடன் இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச் செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: