crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்குறணை பிராந்தியத்தில் ரூபா.5000 கொடுப்பனவு தொடர்பான கலந்துரையாடல்

கண்டி – அக்குறணை பிராந்தியத்தில் கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான 5000/- ரூபா கொடுப்பனவு தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) அக்குறணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள், அந்தந்த பிரிவுகளுக்கான சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் ஊடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இந்த கலந்துரையாடலில் தீர்மானமாகியது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ச, அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி. இந்திகா குமாரி அபேசிங்ஹ மற்றும் கிராம சேவகர்கள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 8 =

Back to top button
error: