crossorigin="anonymous">
உள்நாடுபொது

கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் திகதி தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளபோதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளியேறி வருகின்றது.

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தன.

கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டிருந்ததுடன் கப்பலில் பணியாற்றிய 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, கப்பலில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த கொள்கலன்கள் கடலில் வீழ்ந்தன

குறித்த கொள்கலன்களில் இருந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் கலந்ததாக தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவிக்கின்றார். கப்பலிலிருந்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்கள் நீர்கொழும்பு முதல் பாணந்துரை வரையான கடல் பிராந்தியத்தில் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த கப்பலிலிருந்து கடலில் கலந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருட்களினால் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் என விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவிக்கிறார்

கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட தரப்பினரினால் கடற்கரை பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவிலான பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கரையொதுங்கி வருவதை காண முடிகிறது. அதேபோன்று, கறுப்பு நிறத்திலான வேதிப் பொருள்களும் கடலில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது. தீப்பற்றும் கப்பலின் இரசாயனப் பதார்த்தங்கள் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள், மீன் இனங்கள் மற்றும் பறவைகள் இறந்தமை தொடர்பாக நாரா நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 4 =

Back to top button
error: