crossorigin="anonymous">
வெளிநாடு

ஜப்பான் நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகள் நுழைய தடை

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டு தற்போது மேலும் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள, திரிபடைந்துள்ள புதிய கொரோனா வைரஸான Omicron பரவலைத் கருத்திற்கொண்டு தனது அனைத்து எல்லைகளையும் மூடுவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்கள், தொழிலாளர்களுக்காக இத்தடை விதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார் ஆயினும் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டவர் மற்றும் ஜப்பானியர்கள் மீண்டும் ஜப்பானுக்கு திரும்புவதில் எவ்வித தடையும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Omicron தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள 14 நாடுகளிலிருந்து வரும் நிலையில், அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 + = 58

Back to top button
error: