crossorigin="anonymous">
உள்நாடுபொது

தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை செய்ய சட்ட அனுமதி

கொவிட் வைரசு தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் பிரவேசிப்பதை தடைசெய்வதற்கான சட்ட ரீதியிலான அனுமதி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று (08) பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், இதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.

இதற்காக கடந்த வாரம் தான் சட்ட மா அதிபரிடம் அனுமதி கோரியதாகவும் தெரிவித்த அமைச்சர் அதற்கு அவர் அனுமதி வழங்கியதாகவும் கூறினார்.

அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் இந்த நடைமுறை தற்போது உண்டு. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்லக்கூடும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் காதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 19

Back to top button
error: