crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான ஆடையுடன் பாடசாலைக்கு சமுகமளிக்கலாம்

இலங்கையில் அனைத்து பாடசாலைகளின்  தரம் 1 – 5 வரையான ஆரம்பப் பிரிவினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (25) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந் நிலையில், தமது சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவ, மாணவியர்கள் நாளை (25) தாம் விரும்பும், பொருத்தமான ஆடையுடன் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது, சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து வழங்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − 13 =

Back to top button
error: