crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்பொது

பெய்துவரும் கன மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை

எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது

இலங்கையில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்களான காலி, களுத்துறை, கேகாலை, நுவரரெலியா மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடும் என அடையாளங்காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய கால நிலை தொடர்பாக கூடுதலான கவனத்துடன் செயல்பட வேண்டுமென நிறுவனம் தெரிவித்தள்ளது.

இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: