crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரோனா வைரசு சிகிச்சை மத்திய நிலையமாக 50 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் திருமதி.பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா வைரசு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்படுவதையடுத்து 3500 கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா நோய் சிகிச்சை சேவை தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் இதேபோன்று இவர்களுக்கு கொரோனா வைரசு தொற்று தடுப்பூசியும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 25 = 34

Back to top button
error: