crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி

இலங்கையில் நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இது பற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையெனவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.

பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 35 − 31 =

Back to top button
error: