crossorigin="anonymous">
உள்நாடுபொது

22 முதல் 27 ஆம் திகதி வரை பயணிகள் புகையிரதம் சேவையில் ஈடுபடாது

இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பயணிகள் புகையிரதம் எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் புகையிரதம் மாத்திரம் இக்காலப்பகுதயில் சேவையில் ஈடுபடும் என்று புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதேவேளை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாது

கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாசிய சேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − 48 =

Back to top button
error: