crossorigin="anonymous">
உள்நாடுபொது

இரத்தினபுரி – பலாங்கொடை நகரம் ஒரு வாரத்திற்கு மூடிவிட தீர்மானம்

(நதீர் சரீப்தீன்)

கொவிட்19 அச்சுறுத்தல் மிகத் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பலாங்கொடையில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் ஒரு வாரகாலத்திற்கு மூடுவிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை வியாபார சங்கத்தின் தலைவர் திரு லால் கலப்பத்தி தெரிவித்தார்

பலாங்கொடை வியாபார சங்கத்திற்கும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று நேற்று (15) இரவு 8 மணியளவில் பலாங்கொடை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் தத்தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.இவர்களுக்கும் பலாங்கொடை வியாபார சங்கத்தினருக்கும்.இடையில் இடம் பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இத்தீர்மானத்தின்படி பலாங்கொடை நகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வியாபார நிலையங்களையும் எதிர்வரும் 2021.08.18.ஆம் திகதி புதன்கிழமை முதல் 2021.08.24.ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 52 = 59

Back to top button
error: