crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இறக்காமத்தில் வர்த்தக ரீதியிலான சேதனப் பசளை ஊக்குவிப்பு திட்டம்

இறக்காமத்தில் அரசின் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சேதனப் பசளை பிரயோகத்தை ஊக்குவிக்கும் வர்த்தக ரீதியிலான வேலைத்திட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வரிப்பத்தான்சேனையில் நேற்று (11) இறக்காமம் விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பு விவசாய போதனாசிரியர் எஸ்.ஏ.அஷ்ஹர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.சி.ஏ. நஸீல் கலந்து கொண்டு சேதனப் பசளை உற்பத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஆஹிர், விவசாய போதனாசிரியர் ஏ.எல்.மனாஸர் உற்பட கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 66

Back to top button
error: