crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம்

இலங்கையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையக வளாகத்தில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதுவரை தடுப்பூசி பெற்றிராத முதியவர்கள், நோய் பாதிப்புக்களுக்குள்ளானவர்கள், ஊனமுற்றவர்கள், விசேட தேவையுடையவர்கள், பலவீனமானவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதற்காக 10 விசேட நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பிரதேசம் –
01 வாகனம்
கொழும்பு 15 – மோதறை பிரதேசம் –
03 வாகனங்கள்
கங்காராம மாவத்தை – மட்டக்குளிய பிரதேசம் –
01 வாகனம்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ் பிரதேசம் –
03 வாகனங்கள்
கொழும்பு 15 – ப்ளூமெண்டல் பிரதேசம் –
02 வாகனங்கள்

இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தினை 1906 அல்லது 0112860002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படுமென கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கு அமைவாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 − = 51

Back to top button
error: