crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச ஊழியர்கள் வழமை போன்று கடைமைகளுக்கு அழைப்பு

இலங்கையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையிலும் அழைத்து பணிகளை செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  புதிய சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: