crossorigin="anonymous">
வெளிநாடு

20க்கு 20 போட்டி தொடரில் அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது

இலங்கை அணிக்கு எதிரான ஐந்து 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நேற்று (19) உறுதிப்படுத்தியுள்ளதுடன் போட்டிகள் அனைத்தும் முறையே சிட்னி கிரிக்கெட் மைதானம், தி கெப்பா, மெட்ரிகன், அடிலெய்ட் ஓவல் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் இந்த பருவகாலத்தில் சொந்த மண்ணில் விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளதுடன் அதன்படி, எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. முதல் போட்டி பெப்ரவரி 11ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன். இரண்டாவது போட்டி 13ம் திகதி, மூன்றாவது போட்டி 15ம் திகதி, நான்காவது போட்டி 18ம் திகதி மற்றும் இறுதி 20க்கு 20 போட்டி 20ம் திகதி நடைபெறவுள்ளது.

ஆஷஷ் டெஸ்ட் தொடர் டிசம்பர் 8 முதல் ஜனவரி 18ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஒரு 20க்கு20 போட்டிக்கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியுடன் பருவகாலத்தை ஆரம்பிக்கவுள்ளன

இலங்கை அணி தங்களுடைய அடுத்த சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளதுடன், குறித்த இந்த தொடரையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: