crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் 7 மாவட்டங்களில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு, காலி ,களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட ,கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் ஓரளவு வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 22 =

Back to top button
error: