crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் புனித ஹஜ்ஜூப் பெருநாள் 21ஆம் திகதி

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

இலங்கையில் புனித ஹஜ்ஜூப் பெருநாளுக்கான ஹிஜ்ரி 1442 துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு நேற்று (10) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மஃரிபு தொழுகையைத் தொடர்ந்து பிறைக் குழுத் தலைவர் மௌலவி றிலா தலைமையில் மாநாடு ஆரம்பமானது.

இதன்போது நாட்டில் எப்பாகத்திலும் துல் ஹிஜ்ஜா மாத்திற்கான தலைப் பிறை தென்படாத காரணத்தினால் புனித துல் கஃதா மாதத்தை இன்று 30ஆக பூர்த்தி செய்து எதிர்வரும் 21ஆம் திகதி புதன் கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை வாழ் மக்களை கொண்டாடுமாறு கேட்டு பிறைக் குழு ஏகமனதாக அறிவித்தது.

இதன்போது அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மற்றும் ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: