crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா இன்று (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஆலயத்திற்குள் பக்தர்கள் எவரும் செல்ல முற்றாக அனுமதிக்கப்படாத நிலையில் திருவிழாவினை நடத்தி செல்ல நிர்வாகத்திற்கு சுகாதார பிரிவினர் மற்றும் பொலீசார் அனுமதியினை வழங்கியுள்ளார்கள்.

இதன்படி ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நேற்று (07) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள் எவரும் கலந்து கொள்ளாத நிலையிலும், ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருவிழாவினை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − 24 =

Back to top button
error: