crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்ற அமர்வு ஒழுங்கு பத்திரம்

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (08) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை பின்வரும் விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1. தேருநர்களை பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம்
2. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலம்
3. குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி

பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − 60 =

Back to top button
error: