crossorigin="anonymous">
வெளிநாடு

‘இரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருகிறீர்கள்’ – துருக்கி அதிபர் எர்டோகன்

துருக்கி ஜனாதிபதி எர்டோகன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை விமர்சிப்பு

இரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது,

“ இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்துள்ளதைக் கேள்விப்பட்டேன். பாலஸ்தீனிய பிரதேசங்கள் துன்பம் மற்றும் இரத்தத்தால் துடிக்கின்றன. நீங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். நீங்கள்தான் இதனை என்னை சொல்ல வற்புறுத்தி உள்ளீர்கள். நாங்கள் இனி அமைதியாக இருக்கப் போவதில்லை. இரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: