crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொவிட்19 வைரசு இரண்டாவது டோஸ் மருந்தாக ஃபைசர் தடுப்பூசி

கொவிட்19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக ஃபைசர் தடுப்பூசி இன்று (07) முதல் ஏற்றப்படவுள்ளது.

இதற்கமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொழும்பு-01 இருந்து கொழும்பு-15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்

தடுப்பூசி வழங்கப்படும் திகதி ,நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்த இராணுவத் தளபதி , கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தீர்வு தடுப்பூசி பெற்றுக்கொள்வதாகும் என்றும் கூறினார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 5 =

Back to top button
error: