crossorigin="anonymous">
உள்நாடுபொது

“THE PEARL OF THE SILK ROUTE” நூலின் முதற் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” (பட்டுப் பாதையின் முத்து) என்ற நூல் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் நேற்று (06) அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையின் சீன கலாசார மையத்தின் பணிப்பாளர் திரு. லிவென் யூ (Liwen Yue) அவர்களினால் நூலின் முதல் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது.

பணிப்பாளர் திரு. லிவென் யூ (Liwen Yue) அவர்கள் மற்றும் திரு. சாமர ரன்மண்டல அவர்கள் ஆகியோரினால் எழுதப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் சீன கலாசார மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட தனித்துவமான திட்டங்களின் பிரதிபலிப்பாகும்.

2014 செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் அவர்கள் ஆகியோரின் தலைமையில் –
தெற்காசியாவின் முதலாவது சீன கலாசார மையம் இலங்கையில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது முதல், அதன் பணிப்பாளராகத் தொடர்ந்து சேவையாற்றி வந்த திரு. லிவென் யூ (Liwen Yue) அவர்கள் தனது சேவை காலத்தை நிறைவுசெய்து விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 + = 87

Back to top button
error: