crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மன்னார் நகர மற்றும் பிரதேச சபை பிரிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (05) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது உரிய திணைக்கள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நாளை செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணி முதல் 2 ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 − = 1

Back to top button
error: