crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண மாவட்ட நிகழ்நிலை / தொலைக் கல்வி நடவடிக்கை கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நிகழ்நிலை / தொலைக் கல்வி நடவடிக்கைகளுக்கான வசதியில்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஸ்தாபித்தல் தொடர்பான கலந்துரையாடலானது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (29) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கொவிட்19 தொற்றிடர் நிலையில் நிகழ்நிலை / தொலைக் ல்வி கற்றலை மேற்கொள்வதில் மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள், அவற்றினை நிவர்த்தி செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மாணவர்கள் இணைய வசதிகளை பெறுவதில் உள்ள சவால்கள், ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், சமிக்ஞை குறைபாடுகள் தொடர்பாகவும் உரிய தரப்புக்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வலய கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 + = 79

Back to top button
error: