crossorigin="anonymous">
வெளிநாடு

மலேசியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மலேசியா அரசு வெளியிட்ட அறிக்கையில்,

“ மலேசியாவில் வருகின்ற திங்களுடன் ஊரடங்கு நிறைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி தொற்று 4,000க்கும் கீழே குறையும்வரை ஊரடங்கு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் இதுவரை 5 லட்சதுக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 5% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: