crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இலங்கை வருகிறார்

ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வௌிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: