crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின்சார சபைக்கு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் நுகர்வோருக்கு

மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளது

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின் மூலம் மின்சார சபையின் டிசம்பர் மாத நிதி அறிக்கையின் பிரகாரம் ஓரளவு செயற்பாட்டு இலாபம் கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 28 =

Back to top button
error: