crossorigin="anonymous">
உள்நாடுபொது

“பாராளுமன்றத்தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம் பரிசீலிக்க மேலதிக உறுப்பினர்கள்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம் பரிசீலிக்க மேலதிக உறுப்பினர்கள்

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (18) இலங்கை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ பிரசன்ன ரணதுங்க, கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ கஞ்சன விஜேசேகர, கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, கௌரவ மயந்த திசாநாயக்க மற்றும் கௌரவ ரோஹினீ குமாரி விஜேரத்ன ஆகியோர் அந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு நியமிக்கப்பட்ட மேலதிக உறுப்பினர்கள்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ எம்.டப்ளியூ.டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் கௌரவ டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 + = 77

Back to top button
error: