crossorigin="anonymous">
பிராந்தியம்

சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நேற்று (16) வியாழக்கிழமை இடம்பெற்றன.

நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், உதவிப் பிரதேச செயலாளர் சு.துவாரகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாற்றுத்தினாளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: